94
வட தமிழகத்தை நோக்கி டிசம்பர் மாதத்தில் புதிதாக உருவாகும் புயல் வருவதை, வானிலை ஆய்வு மையம் உறுதிபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் திகதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தற்போது வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.
இந்த நிலையில், வங்கக்கடலில் வரும் டிசம்பர் 3ஆம் திகதி புயல் உருவாகப்போகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புதிதாக உருவாகவுள்ள இப்புயலுக்கு “மிச்சாங் புயல்” (Michaung) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/IMG-20231130-WA0025-300x225.jpg)
இது தமிழகம் மற்றும் தென் ஆந்திர பகுதியை நோக்கி வந்தடையும். இப்புயலின் கூர்முனை சென்னையை நோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் அந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள தயாராக இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் டிசம்பர் 1, 2 திகதிகளில் காற்று 60-70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, கடந்த 27ம் திகதி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று மேற்கு-வடமேற்கில் வங்காள விரிகுடா கடலில் நகர்ந்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக மாறும்.
அதன்பின்னர் வடமேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 4ம் திகதியில் தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 comments
[…] கனமழையால் திறக்கப்பட்ட ஏரி நீரில் அடித்துசெல்லப்பட்ட கார்! பத்திரமாக மீட்கப்பட்ட குடும்பம் […]
[…] நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, […]