Home » ஒன்றாக ராஜினாமா செய்வோம்! ஒருவருக்காக எச்சரித்த 500 பணியாளர்கள்

ஒன்றாக ராஜினாமா செய்வோம்! ஒருவருக்காக எச்சரித்த 500 பணியாளர்கள்

by namthesamnews
1 comment

OpenAI நிறுவனத்தின் 500 பணியாளர்கள் சாம் ஆல்ட்மேனை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என நிர்வாகத்தை எச்சரிக்கை செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு OpenAI நிர்வாகம் CEO -வாக தலைமை தாங்கிய சாம் ஆல்ட்மேனை “அவரது நடவடிக்கை மீது நம்பிக்கை இல்லை”, என்று கூறி திடீரென பதவி நீக்கம் செய்தது.
இதனை தொடர்ந்து பலர் OpenAI நிர்வாகத்தின் முடிவு குறித்து விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில், OpenAI நிர்வாகத்தின் 500 பணியாளர்கள் சாம் ஆல்ட்மேனை மீண்டும் CEO -வாக நியமிக்க வேண்டும்.
இல்லை என்றால் நாங்கள் பணியில் இருந்து விலகுவோம் என நிர்வாகத்தின் இயக்குனர் குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அக்கடிதத்தில் பதவியில் இருந்து விலகி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்து சாம் ஆல்ட்மேன் உடன் பணியாற்றுவோம் எனவும் கூறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் , சாம் ஆல்ட்மேன் 450 கோடி ஊதியத்திற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
இதுகுறித்து தெரிவித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்,
“சாம் ஆல்ட்மேன் மற்றும் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் எங்கள் நண்பர்கள். எனவே, இனி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் AI Advance தொழில்நுட்பம் குறித்த குழுவில் இணைந்து அவர்கள் பணியற்றுவார்கள்” என அறிவித்தது.

You may also like

1 comment

330 கி. மீ வேகத்தில் செல்லக்கூடிய சூப்பர் கார்! ரோந்து படையில் சேர்ப்பு - Namthesam Tamil News December 3, 2023 - 1:39 pm

[…] ஹைபிரிட் சூப்பர் கார் மெக்லாரன் அர்டுரா (McLaren Artura). இது மணிக்கு 330 கிலோ மீட்டர் […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00