Home » வட்டுக்கோட்டை சம்பவம் – நால்வருக்கும் விளக்கமறியல்

வட்டுக்கோட்டை சம்பவம் – நால்வருக்கும் விளக்கமறியல்

by namthesamnews
0 comment
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைதாகியுள்ள நிலையில், அவர்கள் நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் உத்தரவிட்டார்.
இதேவேளை அன்றைய தினம் அவர்களை  அடையாள அணிவகுப்புக்கு தயார்ப்படுத்துமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிவான் கட்டளையிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு அதிகாரி இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், அவ் அதிகாரியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் 26 வயதுடைய வட்டுக்கோட்டை இளைஞன் பொலிஸ் காவலில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார். இச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்தே குறித்த நான்கு பேர் நேற்றையதினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞன் மரணம் தொடர்பில் பொலிஸார் மீது சித்திரவதை குற்றச்சாட்டு எழுந்ததை நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோகதர் உள்ளிட்ட நால்வரும்  கடந்த திங்கட்கிழமை தொடக்கம் பொலிஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் காங்கேசன்துறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான  குழு விசாரணைகளை முன்னெடுத்தது.
அந்தக் குழுவால் நேற்றையதினம் மாலை குறித்த நால்வரும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நண்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் குறித்த நால்வரும் அநுராதபுர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00