102
இந்தியாவில் தனது பிறந்தநாளை கொண்டாட துபாய் அழைத்து செல்லாத ஆத்திரத்தில் மனைவி தாக்கியதால் கணவர் உயிரிழந்தார்.
புனேவின் வானவாடியின் உள்ள டோனி கங்கா ஹவுசிங் சொசைட்டியில் நிகில் புஷ்கராஜ் கண்ணா (36), ரேணுகா நிகில் கண்ணா (36) ஆகிய தம்பதி வசித்து வந்துள்ளனர்.
6 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த இவர்கள் நிகிலின் தந்தை புஷ்கராஜின் வீட்டில் வசித்து வந்தனர்.
நிகிலின் தந்தை புஷ்கராஜ் ஒரு மருத்துவர் ஆவார்.
ரியல் எஸ்டேட் வியாபாரியான நிகில் பள்ளிக்கூடம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் செப்டம்பர் 18ம் திகதி துபாயில் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற ஆசை ரேணுகாவிற்கு இருந்துள்ளது.
அதை நிகிலால் நிறைவேற்ற இயலாமல் போனது.
கடந்த 5ம் திகதியில் வரும் அவர்கள் திருமண நாளையும் நிகில் மறந்து தவறவிட்டுள்ளார்.
மேலும், தனது சகோதரரின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் ரேணுகாவின் விருப்பத்திற்கும் செவிகொடுக்காமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து கணவன் மனைவியிடையே கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வாக்குவாதம் முற்றியதையடுத்து, ரேணுகா நிகிலின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.
மூக்கு மற்றும் பற்கள் உடைந்து ரத்தம் வந்த நிலையில் நிகில் நிலைகுலைந்து சரிந்துள்ளார்.
பதறிப்போய் விழுந்த கணவரை எழுப்ப முயன்றபோது, நிகில் மூர்ச்சையாகி இருந்துள்ளார்.
உடனே மாமனாரை அழைத்துள்ளார் ரேணுகா. அவர் வந்து பார்த்ததும் ஆம்புலன்ஸை அழைத்து சசூன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நிகில் உயிரிழந்தார்.
“ரேணுகா குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கிறோம். மேலும் நிகிலை குத்த கனமான பொருளை ரேணுகா பயன்படுத்தி இருக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று வானவாடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.