146
முன்னணி கார் நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (Toyota Kirloskar Motors) “மேக் இன் இந்தியா” மற்றும் “அனைவருக்கும் நிறை மகிழ்ச்சியை” தரும் உற்பத்தி என்ற உண்மையான உறுதிப்பாட்டை கொண்டு இன்று கர்நாடக அரசுடன், அதன் உற்பத்தியை அதிகப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/IMG_20231122_221612-300x190.jpg)
இந்தியாவில் டொயோட்டா கார் நிறுவனமானது வருடத்திற்கு ஒரு லட்சம் யூனிட் கார்கள் உற்பத்தி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்காக ரூ.3,300 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது இந்தியாவில் டொயோட்டாவின் மூன்றாவது ஆலை ஆகும்.
இது கர்நாடகாவின் பெங்களூருக்கு அருகிலுள்ள பிட்டியில் அமையவுள்ளது.
இந்த வளர்ச்சியானது, சப்ளையர் சுற்றுச்சூழல் அமைப்பில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மேலும் முதலீடுகள் மற்றும் வேலை சாத்தியக்கூறுகளையும் கொண்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலை சுமார் 2000 கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் TKM-யின் 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க பயணத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட முதலீடுகள் இவை என்று கருதுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே, இக்கோட்பாடுகளை ஒப்புக்கொண்டு கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று நடைபெற்றது.
இதில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான மசகசு யோஷிமுரா (Masakazu Yoshimura) ஆகியோர் கலந்துகொண்டனர்.
1 comment
[…] இந்தியாவில் தனது பிறந்தநாளை கொண்டாட துபாய் […]