96
சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவான ‘டைகர் 3’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படம், யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ளது. டைகர் 3 திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, ஒரே நாளில் சுமார் ரூ.40 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
இந்த நிலையில், மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகானில் உள்ள ஒரு திரையரங்கில், டைகர் 3 படம் பார்க்க வந்த ரசிகர்கள் சல்மான்கான் என்ட்ரி ஆனதும் பட்டாசுகளை தியேட்டருக்குள் வெடித்தனர்.
இதனால் பக்கத்தில் உள்ளவர்கள் பயத்தில் அலறி, நான்கு பக்கமும் சிதறி ஓடினர். இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
இதனைத் தொடர்ந்து, புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார், இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரசிகர்களின் இந்த செயல் குறித்து அறிந்த நடிகர் சல்மான் கான், ‘ திரையரங்கினுள் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது. நமக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்காமல் படத்தை கண்டு ரசியுங்கள் ‘ என அறிவுறுத்தியுள்ளார்.