89
கூகுளில் சில வார்த்தைகளை வார்த்தைகளை தேடக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?
மீறியும் நீங்கள் சில விடயங்களை தெரிந்துகொள்ள கூகுளை பயன்படுத்தினால் சிறை செல்லும் வாய்ப்பு கூட உண்டு.
இந்தியாவில் எந்தெந்த விடயங்களை கூகுளில் தெரிந்துகொள்ள முற்படக்கூடாது என்பது குறித்து இங்கே காண்போம்.
ஒரு தனி நபர் அல்லது குழு அரசுக்கு தெரியாமல் வெடிகுண்டு தயாரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றமாகும்.
எனவே அதுகுறித்து நீங்கள் கூகுளில் தேடினால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள்.
இந்தியாவில் சிறுவர் ஆபாசப் படங்களுக்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. நீங்கள் இதுபோன்ற விடயங்களை கூகுளில் தேடினால் தண்டிக்கப்படுவீர்கள்.
அத்துடன் இதுபோன்ற ஆபாச தளங்களில் உங்கள் கைபேசி அல்லது மொபைல் கணக்கை ஹேக் செய்யக்கூடிய பல்வேறு விடயங்களும் உலா வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் பிறக்கும் முன் குழந்தையின் பாலினத்தை அறிய முயல்வது சட்ட விரோதம்.
அத்துடன் இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டாலோ அல்லது இதனுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டாலோ உங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
இணைய மோசடி என்பது நாளுக்கு நாள் இந்தியாவில் அரங்கேறும் குற்றம் ஆகும். இதனால் இணையத்தில் SEO உதவியுடன் ஒரு போலி தளத்தை உருவாக்குவதன் மூலம் மோசடி செய்பவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/images-2023-12-01T093130.487-300x169.jpeg)
இந்த எண்ணை தவறாக அழைப்பதன் மூலம், மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கிக் கணக்குத் தகவல் திருடப்படக்கூடும்.
மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் அல்லது கலந்து ஆலோசிக்காமல் கூகுளில் மருந்துகளை தேடி, அதனை வாங்கி உட்கொள்ளாதீர்கள்.
இதுபோன்ற செயல்களுக்கு தண்டனை இல்லை தான். ஆனாலும், அவ்வாறு செய்தால் மருத்துவமனையை நாட வேண்டிய நிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.