குரோதி வருடம் வைகாசி மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 15.05.2024 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
வேடிக்கையாகப் பேசி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.
தொழிலுக்குத் தேவையான உதவிகளை பெறுவீர்கள்.
இன்று நல்லதும் கெட்டதும் கலந்தே சந்திப்பீர்கள்.
ரிஷபம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
பெட்டிக் கடை, டீக் கடை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள்.
சொந்த பந்தங்களில் நிலவிய பகையை விலக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள்.
மிதுனம்
ரியல் எஸ்டேட் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள்.
தொழிலுக்குப் போட்டியாக இருந்தவர்களை வீழ்த்துவீர்கள்.
இயலாதவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
கடகம்
விருந்து நிகழ்ச்சிகளுக்காக கணிசமான காசு செலவழிப்பீர்கள்.
பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவு செய்வீர்கள்.
குடும்ப ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள்.
சிம்மம்
மற்றவர்களுக்கு நல்லதையே செய்வீர்கள்.
அதனால் பொல்லாப்பில் சிக்குவீர்கள்.
எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லையே என்ற மன வருத்தம் அடைவீர்கள்.
வயிற்று வலி காரணமாக மருத்துவ பரிசோதனை செய்வீர்கள்.
கன்னி
இக்கட்டான நேரத்தில் இல்லத்தரசி செய்யும் உதவியால் கடன் தொல்லையிலிருந்து மீள்வீர்கள்.
எல்ஐசி துறையில் உள்ளவர்கள் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பீர்கள்.
வீடு கட்ட வேண்டிய இடத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பீர்கள்.
துலாம்
தள்ளாட்டமாக இருந்த தொழிலை நிலை நிறுத்துவீர்கள்.
கேட்ட இடத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெறுவீர்கள்.
விருச்சிகம்
உதவி செய்யப்போய் உபத்திரவம் அடையாதீர்கள்.
டீக்கடையில் உட்கார்ந்து பஞ்சாயத்துப் பேசாதீர்கள்.
ரிப்பேரான வாகனத்தை பழுது பார்ப்பீர்கள்.
தனுசு
கடந்த காலத்தில் ஏமாற்றத்தைச் சந்தித்த நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.
வியாபாரத்தில் இருந்த தடைகளை அகற்றுவீர்கள்.
இக்கட்டான நேரத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள்.
மகரம்
நீங்கள் உதவி செய்தவர்களிடம் உதவி கேட்டு ஏமாந்து போவீர்கள்.
விடாமுயற்சியால் வியாபாரத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவீர்கள்.
தொழிலில் எதிர்மறையான பலனால் வேதனைப்படுவீர்கள்.
கும்பம்
குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
புதிய வாகனம் வாங்குவீர்கள்.
வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.
பங்கு பரிவர்த்தனையை சிறப்பாக செய்வீர்கள்.
மீனம்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற மனநிலையில் இருப்பீர்கள்.
காலை வார நினைக்கும் எதிரிகளைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.
செய்யும் தொழிலில் மட்டுமே கவனமாக இருப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)