Home » இன்று 4 ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள்!

இன்று 4 ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள்!

by Vaishnavi S
0 comment

பிப்ரவரி 19ம் தேதியான இன்று ஒவ்வொரு ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷம்

வேலைக்காக வெளியூர் பயணம் செய்யலாம். செல்வாக்கு உள்ளர்வர்களுடன் புதிய நட்பு கிடைக்கலாம். இன்று முடிந்தவரை நீங்கள் வெளிப்படை தன்மையாக இருப்பதே நல்லது. சில விஷயங்கள் மறைக்க நினைத்தால், அது பிரச்சனைகளாக மாற வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்

ரிஷப ராசி கொண்ட பெண்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இன்று நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது. இன்று எந்த ஒரு முடிவு எடுத்தாலும், சற்று யோசித்து முடிவெடுப்பது நல்லது. உடனே எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம்.

மிதுனம்

இன்று மிதுன ராசியினருக்கு அதிர்ஷ்டமான நாள் என்றே சொல்லாம். பணியில் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உறவினர்களிடையே மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகள் இன்று கைகூடும் நாள்.

கடகம்

உணவுக்கட்டுப்பாடு மிகவும் முக்கியம். குடும்ப உறுப்பினர்களிடையே நம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடங்களில் மகிழ்ச்சி நிலவும். பெரியவர்களிடம் மதிப்பு உயரும் நாள்.

சிம்மம்

சொத்து விஷயங்களில் இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வேலைகள் இன்று துரிதமாக நடக்கும். சிலருக்கு வெளியூர் பயணம் நல்ல ஆதாயத்தை தரும். எந்த ஒரு விஷயத்திலும் அமைதியாக இருப்பது நல்லது.

கன்னி

கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. முதலீடுகளிலும் முதலீடு செய்யும்போது யோசித்து செய்யுங்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால், குடும்பத்தின் மீது தனிப்பட கவனம் தேவை.

துலாம்

பொறுமையாக இருப்பது அவசியம். வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் அதிகாரிகளுடன் வாக்கு, வாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்

உடல்நலம் மீது அக்கரை காட்டுவது நல்லது. சிலருக்கு புதிய வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வல்லுநர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கும்.

தனுசு

நீண்ட நாட்களுக்கு பின் பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் வரலாம். செல்வாக்கு உயரும் நாள். நண்பர்களின் உதவி முக்கியமான நேரங்களில் கிடைக்கும். வேலை செய்யும் இடத்திலும் மதிப்பு உயரும்.

மகரம்

குடும்பத்தினரிடம் பொறுமையாக இருப்பது நல்லது. அதேபோல் வியாபாரத்திலும் பொறுமை முக்கியம். வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும்போது வாகனத்தை சோதித்து பார்த்து எடுத்து செல்வது நல்லது. மொத்தமாக மகர ராசியினர் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

பூர்வீக சொத்து குறித்து ஏதேனும் மகிழ்ச்சி செய்தி வரலாம். வருமானம் அதிகரிக்கலாம். வேலை செய்யும் இடங்களில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் வர வாய்ப்புள்ளதால், பொறுமையாக இருப்பது நல்லது.

மீனம்

இன்றைய வெளியூர் பயணம் மறக்கமுடியாத நாளாக மாறும். புதிய விஷயங்கள் நடக்கலாம். நிலுவையில் உள்ள சொத்துகள் பிரச்சனை முடிவுக்கு வர வாய்ப்புகள் உள்ளது. வருமானம் அதிகரிக்கும் நாள்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00