111
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 410 ரன்கள் எடுத்து, ஒரே நாளில் 400 ரன்களுக்கு மேல் விளாசிய மகளிர் கிரிக்கெட் அணி என்ற இந்திய அணி சாதனையைப் படைத்தது.
இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாதமி மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சுமாரான தொடக்கத்தை கொடுத்தாலும், அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்துள்ளது.
தீப்தி ஷர்மா 60 ரன்களுடனும், பூஜா வஸ்திரகர் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தரப்பில் சதீஷ் சுபா 69 (76), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 68 (99) மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 (81) ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல் 2 விக்கெட்டுகளும், கேட் க்ராஸ், சார்லி டீன், சோஃபி எக்லெஸ்டோன், நடாலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
1935ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி ஒரே நாளில் 431 ரன்கள் குவித்திருந்தது.
அதன் பிறகு இதுவரை எந்த மகளிர் அணியும் 400க்கும் மேற்பட்ட ரன்களை ஒரே நாளில் அடிக்கவில்லை.
இன்று 88 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒரே நாளில் 410 ரன்கள் எடுத்து சாதனை படைத்தது. மேலும் முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்தது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/IMG-20231214-WA0091-300x200.jpg)
பின்னர் ஆடிய இங்கிலாந்து 136 ரன்களுக்கு சுருண்டது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி 186 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 479 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.