Home » சர்வதேச நாணய நிதியன் விரிவான கடன் வசதி இன்று நிச்சயமாக வழங்கப்படும்: பந்துல குணவர்தன..

சர்வதேச நாணய நிதியன் விரிவான கடன் வசதி இன்று நிச்சயமாக வழங்கப்படும்: பந்துல குணவர்தன..

by namthesamnews
0 comment

சர்வதேச நாணய நிதியன் விரிவான கடன் வசதி தொடர்பான இரண்டாம் தவணைகள் இன்று நிச்சயமாக வழங்கப்படும் என பந்துல குணவர்தன கூறுகிறார்.

அமைச்சரவை அறிவிப்புகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் முதலாவது மீளாய்வு நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இன்று இடம்பெற்றது.

இலங்கை எதிர்பார்த்த அரச வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் இந்தகடன் வழங்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் படி சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்டிருந்தது.

இதற்கமைய, முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க கடனுதவி முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00