வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (12) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கையின் பிரகாரம் பாடசாலைகளின் அதிபர்களினால் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிகம் உள்ள பாடசாலைகளில், உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது அந்த பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.