75
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் Deep fake வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தெலுங்கு நடிகர் நாக சைதான்யா கருத்து தெரிவித்துள்ளார்.
Deep fake வீடியோ குறித்து அவர் கூறும்போது, ‘தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை பார்க்கும்போது வருத்தமளிக்கிறது.
எதிர்காலத்தில் இவை என்னவெல்லாம் செய்யும் என்ற எண்ணம் பதற வைக்கிறது.
இதற்கு பலியாகி இருக்கும் மற்றும் பாதிக்கப்படபோகும் நபர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதனை தடுக்கும் வகையில் ஒரு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.