Home » மனதைரியமற்ற வெளிவிவகார அமைச்சர்!!!

மனதைரியமற்ற வெளிவிவகார அமைச்சர்!!!

by namthesamnews
0 comment

இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு மன தைரியம் சற்றும் இல்லை என இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள, அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் எனவும், அதற்காக இந்தியாவால் இலங்கை மீனவர்களுக்கு பணம் வழங்கும் செயற்பாடு தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேனனுடன் தான் கலந்துரையாடியதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அண்மையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா வழங்குகின்ற ஒரு ரூபா, இரண்டு ரூபாவை பெற்றுக்கொண்டு, இலங்கை மீனவர்கள் வீடுகளிலேயே இருங்கள் என்று சொல்லக்கூடிய அமைச்சர்களால் எவ்வாறு இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்?

இந்தியாவிடம், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி இல்லை எனவும், எமது மீனவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தால் அது ஏற்கக் கூடியது.

இலங்கை வெளியுறவு அமைச்சர் அப்படி கூறமுடியாத நிலையில் உள்ளார். ஏனெனில் அவர் தமது பதவிகளையும், கதிரைகளையும், இருப்புக்களையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் இந்தியாவின் செட்டைக்குள் உருவாக்கப்பட்ட நாம், தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்பியிருக்கும் எமது மக்களுக்கு எமது கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க விட முடியாது.

எமது மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் என இந்தியாவில் இருக்கும் எமது மீனவர்களை வேண்டுகிறோம். இந்திய –  இலங்கை மீனவர்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கிலே இலங்கை வெளிவிவகார அமைச்சர் செயற்படுகிறார். – என்றார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00