Home » இன்று முதல் கனமழை!!

இன்று முதல் கனமழை!!

by namthesamnews
0 comment
 காற்றுச் சுழற்சி காரணமாக,  கனமழை பொழிய வாய்ப்புக்கள் உண்டு என யாழ்ப்பாண பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர்
நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு, கனமானது தொடக்கம் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இக் காற்றுச் சுழற்சி வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. எனினும் இதன் நகர்வுப் பாதை தொடர்பில் நாளை 16ம் திகதிக்கு பின்னரே உறுதியாக கூற முடியும்.
இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.  மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மிகக் கன மழை பொழிய வாய்ப்புள்ளது.
இக் காலநிலை எதிர்வரும் 22ம் திகதி வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது.
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் இக் கனமழை காரணமாக ஏற்படக்கூடிய வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00