யாழில் உள்ள சிறிய தீவுகளில், இரட்டை ரக புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய மர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் கீழ் குறித்த ஒப்பந்தத்தை U-Solar Clean Energy Solutions (Pvt) Ltd என்ற கம்பனிக்கு வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்படி, நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்கு மின்சார வசதியினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி, குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய ஒப்பந்தக்காரர்களிடம் விலைமனு கோரப்பட்டுள்ளது.