Home » மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – தேசியப்பிடிப்பில் திரண்டது பளை மண்

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு – தேசியப்பிடிப்பில் திரண்டது பளை மண்

by namthesamnews
1 comment
தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மழைப் பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் கௌரவிப்பு நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக பளை நகர முற்றத்தில் இடம்பெற்றது.
தாயக விடுதலைக்காக தம் உயிரை நீத்த மாவீரச் செல்வங்களை நினைவுகூர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மாவீரர்கள் குடும்பங்கள் உட்பட தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
இம் மாதம் 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

1 comment

வட்டுக்கோட்டையில் மாவீரர் நினைவேந்தலும் பெற்றோர் கௌரவிப்பும் - Namthesam Tamil News November 26, 2023 - 1:44 pm

[…] வட்டுக்கோட்டை பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00