89
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முதியோர் இல்லங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று புதன்கிழமை காலை மணிக்கு நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் முகாமாலை அன்பே சிவம், மலையாளபுரம் எஸ்.கே, வன்னேரிக்குளம் யோகசுவாமிகள் திருவடி நிலையம், தர்மபுரம் நமசிவாயம் ஆகிய முதியோர் இல்லங்களின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது முதியோர் இல்லங்களின் கணக்காய்வு நடவடிக்கைகள், பதிவு நடவடிக்கைகள் மற்றும் அனைத்து முதியோர் இல்லங்களையும் உள்ளடக்கியதாக மாவட்டத்திற்கென பொதுவானதொரு யாப்பு உருவாக்கம் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) நளாஜினி இன்பராஜ், உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஹ.சத்தியஜீவிதா, கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் சு.ஜெயனந்தராசா, சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் குறித்த முதியோர் இல்லங்களின் பொதுமுகாமையாளர்கள், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1 comment
[…] வருகின்றன. இதன்படி, கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள […]