123
கடந்த 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்களால் இடம்பெற்றன.
பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளைத் தாண்டி மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் தற்போது அரச படைகளாலும், பொலிஸாராலும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கோப்பாய் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குபற்றி சிறுவர்கள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் குப்பி போன்ற சாயலில் கழுத்தில் அணிகலன் அணிந்து நினைவேந்தலில் சிறுவர்கள்.மூவரை பயன்படுத்தியுள்ளனர் என்ற அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் வீசாந்தவின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று சிறுவர்களின் பெற்றோர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்த பெற்றோர்களுக்கு எதிராக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1 comment
[…] ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் […]