82
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகலுக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.