சோபகிருது வருடம் பங்குனி மாதம் 8 ஆம் தேதி வியாழக்கிழமை 21.03.2024. சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு இடையூறாக இருந்த பிரச்சனைகளை பேசித் தீர்ப்பீர்கள். உரிய நேரத்தில் நண்பர்கள் உதவிக்கு ஓடி வருவார்கள்.
மிதுனம்
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். நினைத்த காரியம் நிறைவேறாமல் தடைபடுகிறதே என்ற எண்ணம் இதயத்தை அழுத்தும்.
கடகம்
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். வியாபார இடங்களில் இன்முகத்தோடு நடந்து கொள்ளுங்கள்.
சிம்மம்
உங்கள் ராசிநாதன் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். திட்டமிட்டு ஏற்பாடு செய்த வெளிநாட்டு பயணங்கள் தள்ளிப் போகலாம். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்காதீர்கள்.
கன்னி
சூரியன் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். குடோன்களில் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். நெருப்பு இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை.
துலாம்
உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். பம்பரமாக சுழன்று வியாபாரத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்வீர்கள்.
விருச்சிகம்
சூரியன் 5 ஆம் ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். கூரிய அறிவோடு சீரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
தனுசு
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். முயற்சிகளுக்கு பொறாமைகாரர்களால் முட்டுக்கட்டை ஏற்பட்டாலும் திறமையாக போராடி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.
மகரம்
சூரியன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். வேலை காரணமாக அதிக அலைச்சல் உண்டாகி அவதிப்படுவீர்கள். பொருளாதார நிலை மந்தமாகி கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
கும்பம்
சூரியன் 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். “காசிக்கு போறேன் ஆள விடு, இனியாவது என்னை வாழவிடு” என்ற மனநிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்களால் குழப்பம் உண்டாகும்.
மீனம்
சூரியன் 1 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். வெட்ட வெட்ட முளைக்கும் முள் செடியை போல் புது புது பிரச்சனைகள் உங்களை தாக்கும். தளராத தன்னம்பிக்கையோடு அவற்றையெல்லாம் தாண்டி வருவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள்,அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)