152
மிச்சாங் புயல் கரையை கடக்கும் நிலையில், சென்னை பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையை கடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
மிச்சாங் புயலால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், பெருங்களத்தூர் -நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளியின் அருகே முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வாகன ஓட்டிகளால் படம் பிடிக்கப்பட்டது.
People were advised not to venture to water bodies near VIT/Nedungundram Lake as a crocodile was spotted near the lake.
Video credits: Special Arrangement pic.twitter.com/REyes4YnLJ— The Hindu (@the_hindu) December 3, 2023
சாலையின் ஒருபுறம் இருந்து மறுபுறம் செல்லும் இந்த முதலை அருகில் உள்ள ஏரியில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கனமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் சென்னையில் மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.