102
தமிழக மாவட்டம் ஈரோட்டில் கல்லூரி மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளியப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி தங்கராசு – சித்ரா.
விவசாய தொழில் செய்து வரும் இத்தம்பதியின் மகள் பிரதீபா(18), கவுந்தபாடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பிரதீபாவுக்கு செல்போனில் கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதனால் அவர் வீட்டில் இருக்கும்போதெல்லாம் செல்போனிலேயே மொழி இருந்ததாக கூறப்படுகிறது.
அவரது தாய் சித்ரா எப்போதும் கேம் விளையாடும் பிரதீபாவை கண்டித்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த பிரதீபா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை கவனித்த வீட்டில் இருந்த நபர்கள் பிரதீபாவை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதீபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.