101
பிரபல நடிகர் அனுமோகன் இலங்கை சுனாமியால் காணாமல் போகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநராக 1980களில் அறிமுகமானவர் அனுமோகன்.
இது ஒரு தொடர் கதை, நினைவுச்சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.
விஐபி படத்தின் மூலம் நடிகராக பிரபலமான அனுமோகன் அதனைத் தொடர்ந்து படையப்பா, மின்சார கண்ணா, ஏழையின் சிரிப்பில் என பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தான் சமீப காலமாக சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில கணிப்புகளை கூறி வருகிறார்.
குறிப்பாக உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறும் என்று கூறினார்.
அத்துடன் வெற்றிகளை குவித்துக் கொண்டே இருக்கும் என்றும் அவர் கூற, இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியுற்றது.
இதனால் நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கை குறித்து அவர் கூறிய விடயம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “31.12.24க்குள் ஒரு பெரிய அழிவு வரும். இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும்.
இது சித்தர் ஏட்டு குறிப்புகளில் இருக்கிறது. ஏற்கனவே இலங்கை சுனாமி வந்ததால் தனி தீவாக உள்ளது.
2004 ஆம் ஆண்டு சுனாமி வரும் என்று கூறினோம். அதை யாரும் நம்பவில்லை.
எனவே இலங்கை சுனாமியால் அழியும்” என்று கூறியுள்ளார்.
1 comment
[…] இலங்கையில், இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. […]