யாழ்ப்பாணம் நகரில் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கென புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவ பிரிவு கட்டிடம் உத்தியோகபூர்வமாக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
புதிய கட்டடத்திற்கான “சாந்தி பூஜை” நேற்று வியாழக்கிழமை நடைபெற்றதுடன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சமய சம்பிரதாயபூர்வமாக கட்டிடத்தில் பால் காய்ச்சப்பட்டது.
நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக பீடாதிபதிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், மருத்துவ பீடத்தின் கல்விப் பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
3 comments
[…] படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். […]
[…] காலை, பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டம் […]
[…] யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. […]