குரோதி வருடம் வைகாசி மாதம் 21 ஆம் தேதி திங்கட்கிழமை 3.06.2024 சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷம்
ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.
ரியல் எஸ்டேட் தொழில் மந்தநிலையை காண்பீர்கள்.
ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள்.
ரிஷபம்
அவசியமான காரியங்களுக்கு அதிகமாக செலவு செய்வீர்கள்.
ஒரு முறைக்கு இரு முறை அலைந்து வேலையை முடிப்பீர்கள்.
குடும்பத்தில் மருத்துவச் செலவுக்கு கடன் வாங்குவீர்கள்.
மிதுனம்
நிலையான வருமானம் பெறுவதற்கு திட்டம் தீட்டுவீர்கள்.
பெரியோர்களின் உதவியால் பொருள் சேர்க்கையை அதிகரிப்பீர்கள்.
சகோதர உறவுகளில் இருந்த பிரச்சனையை தீர்ப்பீர்கள்.
கடகம்
தடையில்லாமல் காரியங்கள் செய்வீர்கள்.
தன வரவை பெருக்குவீர்கள்.
புதிய பெண் நண்பர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளாவிட்டால் அவமானம் அடைவீர்கள்.
சிம்மம்
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் தூக்கத்தை தொலைப்பீர்கள்.
பின்னர் தேவையற்ற பிரச்சனைகளை விலக்கி நிம்மதி அடைவீர்கள்.
முடங்கிப்போன உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கன்னி
கூட்டு வியாபாரத்தில் கொஞ்சம் விழிப்போடு நடந்து கொள்ள தவறாதீர்கள்.
மற்றவர்கள் பிரச்சனைகளில் மல்லுக்கட்டி நிற்காதீர்கள்.
கொடுக்கல் வாங்கல் தொழிலில் இரு மடங்கு எச்சரிக்கையுடன் செயல்பட மறக்காதீர்கள்.
துலாம்
கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள்.
கட்டுமானத் தொழிலில் விறுவிறுப்பாக செயல்படுவீர்கள்.
நில விற்பனையில் எதிர்பாராத பண வரவு அடைவீர்கள்.
விருச்சிகம்
தொழிலுக்கு இடையூறாக இருப்பதை வெட்டி எறிவீர்கள்.
எந்தக் காரியத்திலும் ஆலோசித்து இறங்குவீர்கள்.
வெளியூர்ப் பயணங்களில் சாமர்த்தியமாக ஆர்டர் பிடிப்பீர்கள்.
தனுசு
உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள்.
என்ன தடை வந்தாலும் தாண்டிச் செல்வீர்கள்.
குடும்ப நன்மைக்காக கடுமையாக உழைப்பீர்கள்.
மகரம்
தொழிலுக்கு வேண்டிய முதலீடுகளை வங்கி மூலம் பெறுவீர்கள்.
உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள்.
உறவினர்கள் செய்யும் உள்குத்து வேலையால் குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினையை தீர்ப்பீர்கள்.
கும்பம்
குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் அன்பை புரிந்து கொள்ளாததால் மன வேதனைப்படுவீர்கள்.
சகோதர உறவுகளால் சங்கடங்களைச் சந்திப்பீர்கள்.
சகோதர உறவுகளால் சங்கடங்களைச் சந்திப்பீர்கள்.
மீனம்
கடந்த காலத்தில் பட்ட கஷ்டத்தால் கடுமையாக உழைப்பீர்கள்.
வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள்.
வருமானம் பெருகி மன மகிழ்ச்சி கொள்வீர்கள்.