Home » அடுத்த ஒரு மாதம் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

அடுத்த ஒரு மாதம் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

by namthesamnews
0 comment
சனி பகவானின் ராசியான மகரத்தில் புதன் பயணித்து வருவதனால், 8ஆம் திகதி முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
மேஷ ராசிக்காரர்கள் சம்பள உயர்வு, பதவி உயர்வு பெற இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
இந்த ராசியின் 10வது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளதால் உங்களின் வேளைகளில் தடைகள் ஏற்படும்.
எனவே, வேலை தொடர்பில் எந்தவொரு முடிவையும் சிந்தித்து செயல்பட வேண்டும். குறிப்பாக நிதி விடயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், முதலீடு செய்ய நினைப்பதை இக்காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
புதன் மிதுன ராசியில் 8வது வீட்டில் அஸ்தமனமாவதால், மிதுன ராசிக்காரர்கள் பணம், குடும்பம், ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தொழிலைப் பொறுத்தவரை கூட்டு வணிகம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மிகுந்த அழுத்தத்தை உணர்வார்கள். உடன் வேலை செய்வோருடன் வாக்குவாதத்தில் ஈடுபடலாம்.
இக்காலத்தில் நீங்கள் தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களும் பண இழப்பை அடுத்த ஒரு மாதத்தில் சந்திக்க நேரிடும்.
எனவே பண விடயத்தில் மிகவும் கவணமாக இருக்க வேண்டும்.
அலுவலகத்தில் சற்று கவனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதுடன், உறவுகள் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00