113
மிச்சாங் புயல் கரையை நோக்கி வருவதை தொடர்ந்து 142 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்று சென்னையின் கிழக்கு-தென்கிழக்கே 510கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறி வரும் 5ஆம் திகதி ஆந்திராவின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் பக்தியின் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிச்சாங் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்புயலால் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் முதற்கட்டமாக, மதுரை நிஜாமுதீன், சென்னை-அகமதாபாத், மதுரை-சண்டிகர் மற்றும் சென்னை-கொல்கத்தா வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான ரயில்கள் உட்பட 142 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், புயலின் காரணமாக சென்னையில் நடக்கும் கட்டுமான பணிகளை நாளை முதல் 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கவும், கட்டுமான பொருட்களை தரைத்தளத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.