2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகளுக்கான ஒதிக்கீடு என்பவற்றிட்கான என்பன தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் மொத்தச் செலவீனம் 7,833 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அரச சேவைச் செலவினங்களுக்காக 3,861 பில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 2024ஆம் நிதியாண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனம் 203 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.