ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டமை தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வர்த்தமானி அறிவித்தலில் படி கையொப்பமிட்டுள்ளார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ “எக்ஸ்” தளத்தில் இந்த செய்தியினை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடையை நீக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு தாம் சர்வதேச கிரிக்கட் பேரவையிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கணக்காய்வு அறிக்கை தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தாம் வினவியுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.