92
பிணைக்கக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு 4 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் மக்கள் உணவு , தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
மேலும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் காஸாவில் இதுவரை 11,500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் குழந்தைகளும் அடங்குவர்.
இந்த நிலையில் இஸ்ரேல் கேபினெட் ஒப்பதல் அளித்ததன் பேரில் 4 நாட்கள் போர் நிறுத்தத்தை நெதன்யாகு அறிவித்துள்ளார்.
50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.