Home » மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

by namthesamnews
2 comments
திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் 2 பிரிவுகளில் மன்சூர் அலிகான் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பூதாகரமானதைத் தொடர்ந்து நடிகர் சங்கம் அவருக்கு அறிக்கை வெளியிட்டது.
இதனால் கோபமடைந்த மன்சூர் அலிகான் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து ஆவேசமாக பேசினார்.
 அப்போது அவர் திரிஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என்றும், அதற்காக மன்னிப்பு கேட்கபோவதில்லை என்றும் கூறினார்.
மேலும் பத்திரிகையாளர்களை விளாசிய அவர் எஸ்.வி.சேகர் விடயத்திலும், மாணவி அனிதா இறப்பு விடயத்திலும் மகளிர் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கு தொடர்பில் பொலிஸார் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் இவ்விவகாரம் தொடர்பாக அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப பொலிஸார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

2 comments

பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளரால் தாக்கப்பட்ட நடிகை வனிதா விஜயகுமார்? வெளியிட்ட அதிர்ச்சி புகைப November 26, 2023 - 3:02 pm

[…] நேற்று இரவு தன் தங்கை உடன் நடிகை வனிதா விஜயகுமார் சாப்பிட சென்றுள்ளார். எனவே, தனது […]

என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து.. மீண்டும் ஆவேசப்பட்ட குஷ்பு - Namthesam Tamil News November 28, 2023 - 6:08 pm

[…] இளைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் செய்யவில்லை என்று நடிகை […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00