91
புனேவில் இருந்து மூளைச்சாவு அடைந்தவரின் நுரையீரலை கொண்டு செல்லும் போது ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதையும் பொருட்படுத்தாமல் மருத்துவர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு சென்னைக்கு நுரையீரலை கொண்டு வந்துள்ளார்.
நவி மும்பையின் அப்போலோ மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சஞ்சீவ் யாதவ் தான் இக்காரியத்தை செய்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே பிம்ப்ரியில் உள்ள டி.ஒய்.பட்டீல் மருத்துவமனைக்கு சென்று, அங்கு பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியை சேர்ந்த மூளைச்சாவு அடைந்த 19 வயதுள்ள இளைஞரின் நுரையீரலை எடுத்துக்கொண்டு சென்னை செல்ல கிளம்பியுள்ளார்.
டாக்டர் சஞ்சீவ் மற்றும் அவரது குழுவினர் ஆம்புலன்ஸில் பயணம் செய்த போது வாகனம் விபத்துக்குள்ளானது.
வேன் மற்றும் அரசு பேருந்து மீது மோதிய ஆம்புலன்ஸ், அதன் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதி நின்றது.
இதில் டாக்டர் சஞ்சீவ் மற்றும் அவரது குழுவினர் காயமடைந்தனர்.
இருப்பினும் காயத்தை பொருட்படுத்தாமல், மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து காரை வரவழைத்த மருத்துவர் மற்றும் அவரது குழுவினர் விரைவில் விமான நிலையத்தை அடைந்தனர்.
பின்னர் நுரையீரல் சென்னை கொண்டு வரப்பட்டது.
கொண்டு வரப்பட்ட நுரையீரலை, கேரளாவை சேர்ந்த நோயாளிக்கு பொருத்தும் அறுவை சிகிச்சையை டாக்டர் சஞ்சீவ் வெற்றிகரமாக செய்து முடித்தார்.
தான் காயம் அடைந்திருந்த போதிலும், நோயாளியின் உயிரை காப்பாற்றிய டாக்டர் சஞ்சீவ் யாதவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
1 comment
[…] வெளிப்படுத்தினர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சின்னாலிசூர் சுகாதார நிலையத்திற்கு […]