111
மாவீரர்களின் சாபம் உங்களை விடாது! – ரணிலை எச்சரித்த சாணக்கியன்
‘மாவீரர்களின் சாபம் கோத்தபய ராஜபக்ச அனுபவித்தது போல் தற்போதைய ஜனாதிபதி ரணில் அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.’
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் சூளுரைத்தார்.
நேன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.
மேலும், போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கியதற்காக ஜனநாயக போராளிகளின் கட்சியின் துணைத் தலைவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான கைது நடவடிக்கைகளால் இவர்கள் இவ் சட்டத்தை வைத்து எமது இனத்தினை முடக்கப் பார்க்கின்றார்கள்.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதர்க்கான உரிமை கூட எமக்கு இல்லையா? எனவும் கேள்வியெழுப்பினார்.
அத்துடன் மட்டக்களப்பு முழுவதும் குடிநீர் கிடைக்க வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் முன்வைக்கப்பட்டது.
1 comment
[…] – இவ்வாறு பாராளுமன்றத்தில் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் […]