Home » 2024ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் திட்டங்கள குறித்து பேச்சுவார்த்தை..

2024ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் திட்டங்கள குறித்து பேச்சுவார்த்தை..

by namthesamnews
0 comment

எதிர்வரும் காலங்களில்  சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் திட்டங்கள் தயாரிக்கப்படும்போது அதற்கு சமாந்தரமாக உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக 2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 5 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைக்க எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது எதிர்வரும் ஆண்டில் செல்வந்த நாடுகளிலிருந்தான சுற்றுலாப் பயணிகளை அதிகம் வரவழைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இலங்கையிலுள்ள மக்கள் சமூகம் தயாராக இருப்பதன் அவசியமும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. சுற்றுலா பயணிகளிடம் பணம் மோசடி செய்வதை நிறுத்திவிட்டு, சுற்றுலா பயணிகளை மரியாதையுடன் வரவேற்பதற்கான கட்டமைப்பு தயார் செய்யப்பட வேண்டும் என்றும் குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் ஏற்கனவே இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் மட்டத்தில் சுற்றுலாத் தளங்களைக் கொண்ட இடங்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தயாரிப்பது முக்கியம் என்றும் குழு சுட்டிக்காட்டியது.

மேலும்இ கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் “கைத்தொழில் கிராமங்கள்” திட்டத்தின் செயற்பாடுகள் குறித்தும், அவற்றை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது குறித்தும் இங்கும் கலந்துரையாடப்பட்டது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைஇ கைத்தொழில் அமைச்சின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைஇ கம்பனிப் பதிவாளர் திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, கஹட்டகஹ க்ரஃபைட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் 2019/2020 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை பொஸ்பேட் லிமிடட் நிறுவனத்தின் வருடாந்த 2021/202 அறிக்கைஇ இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவகத்தின் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை என்பன குழுவில் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00