94
பிரபல நடிகர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலாட்டா செய்தார் என்றும், பத்திரிகையாளர்களை பாராட்ட தவறிவிட்டார் என்றும் ஊடகவியலாளர் பிஸ்மி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தனது தந்தை அறிமுகப்படுத்தியதால் சினிமாவில் நுழைந்தாலும், தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க பல ஆண்டுகள் போராடினார்.
அதன் விளைவாக தற்போது உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் நடிகர் விஜய். ஆனால் ஆரம்ப கட்டங்களில் ஊடகங்களால் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார்.
அவ்வாறு ஒருமுறை விஜய் குறித்து ஊடகம் ஒன்று விமர்சித்தபோது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செய்த விடயம் குறித்து ஊடகவியலாளர் பிஸ்மி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், “பத்திரிகையாளர்கள் நடிகர்கள் குறித்து நல்லது எழுதினால் நன்றி சொல்லமாட்டார்கள். ஆனால் விமர்சனம் எழுதினால் ஏன் எழுதினீர்கள் என்று கேட்பார்கள்.
அப்படித்தான் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும். அதாவது, விஜய் நடிக்க வந்த புதிதில் அவரை ஒரு பத்திரிகை வரம்பு மீறி விமர்சித்துவிட்டது. உடனடியாக எஸ்.ஏ.சந்திரசேகர் பெரிய படையை திரட்டிக்கொண்டு அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்று கலாட்டா செய்து மன்னிப்பு கேட்க வைத்தார்.
ஆனால், பின்னாளில் பல பத்திரிகைகள் விஜய்யை தலையில் தூக்கி வைத்து எழுதின. அப்போது சந்திரசேகரோ அந்தப் பத்திரிகைகளுக்கு ஒரு நன்றிகூட தெரிவிக்கவில்லை. விஜய்க்காக அதை செய்த எஸ்.ஏ.சி இதையும் செய்திருக்க வேண்டும்” என்றார்.
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் பாங்காக்கில் நடந்து முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.
1 comment
[…] தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரும், முன்னாள் நடிகர் சங்க தலைவரும், தேமுதிக கட்சியின் தலைவரும், […]