Home » படுவேகமாக சரியும் பிறப்பு வீதம் !

படுவேகமாக சரியும் பிறப்பு வீதம் !

by namthesamnews
0 comment
நாட்டில் (இலங்கையில்) குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, 2019ம் ஆண்டு காலம் தொடக்கம் 2022ம் ஆண்டு பகுதி வரை இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் திருமணங்கள் தொடர்பான தரவு அறிக்கையில், இலங்கையில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2014ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடம் ஜூலை 1ம் திகதி வரை, கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 68 ஆயிரத்து 920 ஆக குறைவடைந்துள்ளது.

2022 ம் ஆண்டில் வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சசத்து 75 ஆயிரத்து 321 எனவும், 2021ம் ஆண்டில், பிறப்புகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 84 ஆயிரத்து 848 ஆகவும், 2020 ம் ஆண்டில் 3 லட்சத்திற்கும் அதிகமான பிறப்புகள் பதிவாகியுள்ளன. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொகை கணக்கெடுப்பின்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு பிறப்பு பதிவு 6 ஆயிரத்து 401 ஆக குறைந்துள்ளது. அதேவேளை 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 41ஆயிரத்து 786 பிறப்புகள் குறைவடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகள், பிறப்பு கட்டுப்பாட்டுத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு முறைகள் மற்றும் உலகளாவிய தொற்றுநோய்கள் உட்பட்ட பல காரணங்களால் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற முடிவை மக்கள் எடுத்துள்ளனர் என  சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00