நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போது, விஜயகாந்த் இறுதி சடங்கில் நடிகர் அஜித்குமார் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதில்,
அஜித்திற்கும் விஜயகாந்துக்கும் பிரச்சனை என்றெல்லாம் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே நடந்தது என்னவென்றால் கலை நிகழ்ச்சியில் அஜித்தை கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் கூப்பிட்டது உண்மைதான்.
ஆனால் அந்த நேரத்தில் அஜித் பைக் ஆக்சிடெண்டில் அடிபட்டு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருந்தார்.
இது எங்களுக்கு வேறு ஒருவர் மூலமாக தான் தெரிய வந்தது. அதோடு அந்த நிகழ்ச்சிக்கு நான் வரவில்லை என்றாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பதாக அஜித் சொன்னதாகவும் அந்த நபர் எங்களிடம் சொல்லி இருந்தார்.
அதற்கு விஜயகாந்த் சரி என்று விட்டுவிட்டார். பிறகு அஜித் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததற்கு நீங்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை வேண்டாம் என்று விஜயகாந்த் சொன்னார். அதற்கு பிறகு விஜயகாந்த்தும், அஜித்தும் நன்றாகத்தான் இருந்தார்கள். மற்றபடி சோசியல் மீடியாவில் வருவது போல அவர்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது.
கேப்டன் தங்கமான மனிதர் அவர் எல்லோருக்கும் உதவக் கூடியவர். அது பற்றி அஜித்துக்கு நன்றாகவே தெரியும் என்று அந்த பேட்டியில் மீசை ராஜேந்திரன் பேசி இருக்கிறார்.