நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதிவேக வீதிகளில் வாகனம் செலுத்தும் போது 50 மீற்றர் தூர இடைவௌியை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை இலத்திரனியல் முறையில் காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையேஇ இருண்ட காலநிலை காரணமாக முன்பக்க விளக்குகளை எரிய வைத்து வாகனங்களை இயக்குமாறு அதிவேக போக்குவரத்து பொலிசார் சாரதிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.