70
பிரான்ஸ் நாட்டில் கொட்டித்தீர்த்த மழையினால் ஆறுகள் நிரம்பி கரை உடைந்ததால், நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸில் சமீப நாட்களாக பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் 26 நாட்களில் 215 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
1953யில் இருந்து மழையின் அளவு சரிந்து வந்த நிலையில், கடந்த 1993ஆம் ஆண்டில் 197 மிமீ என அதிகபட்சமாக பதிவானது.
அதற்கு பிறகு மழையின் அளவு சரிந்தே காணப்பட்டது எனவும், தற்போது 215 மிமீ பதிவாகி இருப்பதால், வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டின் பல இடங்களில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கும் நிலை உருவானது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/images-38-1-300x200.jpeg)
வடக்கு மற்றும் கிழக்கு பிரான்ஸில் பரவலான வெள்ளம் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நீரில் மூழ்கிய வீடுகளை காலி செய்ய வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டனர்.
மேலும் சாலைகள், பள்ளிகள் மற்றும் பொது கட்டிடங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) கலேய்ஸ் என்ற பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று மக்களை சந்தித்து தேவையான மற்றும் பாதிக்கப்பட்டதிற்கான அனைத்து நிவாரணம் உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளார்.