108
அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி பதக்கங்கள் வென்று முல்லைத்தீவு மாவட்டத்த்துக்கு பெருமை சேர்த்திருந்தார்.
குறிப்பாக 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.
இவரின் இச் சாதனையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் திருமதி. அகிலத்திருநாயகியின் சாதனைகள் தொடர்பாக வாழ்த்துரைகள் இடம் பெற்றன.
அத்துடன் நினைவுச் சின்னம் மற்றும் பணமுடிப்பு ஆகியனவும் வழங்கப்பட்டன.
சாதனை நாயகி அகிலத்திருநாயகி பொன்னாடை மற்றும் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.
1 comment
[…] முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். […]