Home » மெட்ரோ ரயில் கதவில் சேலை சிக்கியதில் பெண் மரணம்!

மெட்ரோ ரயில் கதவில் சேலை சிக்கியதில் பெண் மரணம்!

by namthesamnews
0 comment
டெல்லியில் மெட்ரோ ரயில் கதவில் சேலை மாட்டி இழுத்துச் செல்லப்பட்டு, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள வீர் பண்டா பைரஹி மார்க் பகுதியை சேர்ந்தவர் ரீனா (34).
கணவரை இழந்த இவர் தனது 12 வயதுடைய மகள் மற்றும் 10 வயதுடைய மகனுடன் வசித்து வருகிறார்.
இவர் பைரஹி மார்க் பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த வியாழனன்று மகனுடன் இண்டர்லாக் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ரீனா சென்றுள்ளார்.
அங்கு மெட்ரோவில் ஏறிய அவர், மகன் ரயிலில் ஏறாததை கண்டு, அவரும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார்.
அப்படி இறங்கும்போது அவருடைய சேலை, மெட்ரோவின் கதவு மூடும்போது அதில் சிக்கியது.
உடனே சேலையை விடுவிக்க முயன்றுள்ளார். ஆனால் மெட்ரோ ரயில் புறப்பட்டது. இதனால் சில மீட்டர் தூரம் அவர் இழுத்துச் செல்லப்பட்டு, தண்டவாள பகுதியில் விழுந்துள்ளார்.
அப்போது ரயில் அவர் மீது ஏறியது. இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ரீனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவர் 3 மருத்துவமனைகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இறுதியில் டெல்லி சப்தர்கஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பலத்த காயங்களுக்காக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த ரீனா நேற்று உயிரிழந்தார்.
இதனையடுத்து, இரண்டு குழந்தைகளையும் கவனிக்க யாரும் இல்லை, DMRC இச்சம்பவத்தில் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரீனாவின் உறவினர்கள் வலியுறுத்தினர்‌.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00