இலங்கையில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படத்தை பேஸ்புக் கணக்கில் பதிவிட்ட
குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகநபருக்கு அக்கரைப்பற்று நீதிவான் இரண்டு
வருட கடூழியச் சிறைத் தண்டனையை விதித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணால் இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக அந்தச் சந்தேகநபரைக் கைது செய்து
அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில்
வழக்குத் தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணைகளின் போது குற்றத்தை ஏற்றுக்கொண்ட சந்தேகநபருக்கு இன்று
இரண்டு வருட கால கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அக்கரைப்பற்று
நீதிவான் எம்.எச்.எம். ஹம்சா இந்தத் தண்டனையை விதித்தார்.