79
நேபாளத்தின் ஜாஜர்கோட் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரமிதண்டா கிராமத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும், முதற்கட்டமாக 11 மைல் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 69 பேர் பலியானதாக அறியப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து நேபாள பிரதமர் “புஷ்பா கமல் தஹல்” நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மனித உயிர் மற்றும் உடல் சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தார்.