94
பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியை பாராட்டியுள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இதனையடுத்து இந்திய வீரர்கள் அனைவரிடமும் இறுக்கமான மனநிலை நிலவியது.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டியை கண்டுகளித்தார்.
தோல்விக்கு பின்பு இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் தனது புகைப்படக்கலைஞர் உடன் சென்ற மோடி, இந்திய வீரர்களிடமும் பயிற்சியாளரிடமும் ஆறுதல் கூறிய காணொளி பின்னர் வெளியானது.
இதனை சிலாகித்த அக்தர், “இந்திய பிரதமரின் செயலை நான் பாராட்டுகிறேன். இச்செயல் இந்தியா ஒரு தேசமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு பக்கபலமாக இருக்கிறது என்பதை குறிப்பிடுகிறது. இது மிகவும் சிறந்த செயலாகும்” என்றார்.
மேலும் “போட்டி முழுவதும் அவர் சரியான நோக்கத்தினை கொண்டிருந்தார். தனிப்பட்ட மைல்கற்களை பற்றி அவர் கவலைப்படவில்லை. மாறாக இந்தியாவிற்காக உலககோப்பை வெல்வதில் கவனம் செலுத்தினார். நான் அவரை உண்மையாக உணர்கிறேன்” என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை பற்றி தெரிவித்தார்.
2 comments
[…] நான் பெருமையடைகிறேன். வரவிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இது உற்சாகமான நேரம். மேலும் அணி […]
[…] கடந்த ஏப்ரல் மாதத்தில் அவர் மீது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் […]