98
நேபாளத்தின் வடமேற்கு மாவட்டம் ஜாஜர்கோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 157 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் தற்போது மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு,உயிர் பிழைத்தவர்களுக்கான நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி “நிலநடுக்கத்தால் நேபாள மக்கள் உயிரிழந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா நேபாளத்துடன் துணை நிற்கும்.இதிலிருந்து மீண்டு வர நேபாளத்திற்கு இந்தியா அனைத்து உதவிகளும் செய்ய தயார்” என்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.