255
பிரபல இசையாமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்.
பின்னணி பாடகியான பவதாரிணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
இதற்காக அவர் இலங்கைக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தான் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது உடல் நாளை சென்னைக்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.
பவதாரிணி மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பாரதி படத்தில் இடம்பெற்ற “மயில் போல பொண்ணு ஒன்னு” பாடலுக்காக பவதாரிணி 2000ஆம் ஆண்டில் தேசிய விருது பெற்றார்.