91
லண்டனில் Colindale பகுதியில் வசிக்கும் க்ருணால் ப்ரஜாபதி(27), ரிங்கல்பென் ப்ரஜாபதி (24) எனும் இந்திய தம்பதியருக்கு 11 மாதங்களே ஆன ஹேஸல் எனும் மகள் இருந்துள்ளார்.
பிறந்து 11 மாதங்களே ஆன ஹேஸல், கடந்த செப்டம்பர் 22ஆம் நாள் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அக்குழந்தை இறந்தது.
இறந்த குழந்தையின் கன்னத்தில் யாரோ கடித்திருந்த பல் தடம் இருந்துள்ளது.
மேலும் உடற்கூறு ஆய்வில் ஹேஸலின் மண்டை ஓடு உடைந்தும், கால் பிசகியும் இருந்துள்ளது. உடலின் பல இடங்களில் காயங்களும் இருந்துள்ளது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் குழந்தையை தவறுதலாக கீழே போட்டு விட்டதாக அக்குழந்தையின் தந்தை க்ருணால் தெரிவித்தார்.
குழந்தையை அழைத்து வரும் முன் குளிக்க வைத்ததாக தாய் ரிங்கல்பென் தெரிவித்தார்.
அப்போது குழந்தையின் கன்னத்தில் இருந்த பல்தடத்தை மற்றும் உடலில் உள்ள காயங்களை பார்க்கவில்லையா? என்ற கேள்விக்கு, இல்லை என்றும் அவை மருத்துவமனையில் ஏற்பட்டிருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஒரு தொலைபேசி அழைப்பில் க்ருணால், குழந்தைக்கு என்ன ஆனது என்று என்னிடம் சொல், நான் என்ன சொல்ல வேண்டும் என்று ரிங்கல்பென்னிடம் கேட்டுள்ளார்.
அவர் எதற்காக உங்களை அப்படி கேட்டார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ரிங்கல்பென் “அவர் எப்போதும் பொய் தான் பேசுவார்” என்றார்.
உடற்கூறு ஆய்வுகள் முடிவில் குழந்தை கொல்லப்பட்டுள்ளதாக தெரிய வந்த பின்பும் குழந்தையின் பெற்றோர்கள் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசிவருவதால் இவ்வழக்கு மேலும் சிக்கல் ஆகியுள்ளது.