130
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் 11 மலையேறுபவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி எரிமலை உள்ளது.
இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 9,484 அடி உயரத்தில் உள்ளது.
இந்த எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெடித்தது.
இதற்கு முன்பாக மலையேறுபவர்கள் 75 நபர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் 49 பேர் கீழே இறங்கியுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் வெளியேற்றப்படாத 26 பேரில் 14 பேர் மீட்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அதில் 3 பேர் உயிருள்ள நிலையிலும், 11 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர்.
மீதம் உள்ள 12 பேரை காணவில்லை என்று தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் அப்துல் மாலிக் கூறியுள்ளார்.
வெடித்த எரிமலையின் புகையானது சுமார் 3000 மீட்டர் உயரம் வரை பரவியிருந்தது.
நேற்று எரிமலையில் சிறுசிறு வெடிப்புகள் இருந்ததால் தேடுதல் பணியை தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளியேறிய 49 பேரும் தீக்காயங்களுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.