86
பீகாரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 10,000 ஆண்டுகளில் நாட்களின் கிழமைகளை அதிவேகமாக கூறி சாதனை படைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் வைஷாலி பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் அபய் குமார். இவர் கோவிட் தொற்று காலத்தில் வரலாறு குறித்த தேடல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 10,000 ஆண்டுகளில் கூறப்படும் திகதிகளின் கிழமைகளை கண்டறியும் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/12/IMG-20231208-WA0012-231x300.jpg)
அவர் மேற்கொண்ட பயிற்சியின் விளைவாக 10,000 ஆண்டுகளில் கூறப்பட்ட 19 திகதிகளின் கிழமைகளை சரியாகவும், கணினியை விட வேகமாகவும் ஒரே நிமிடத்தில் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக ஒரு நிமிடத்தில் 16 கிழமைகளை கூறி இவர் படைத்த சாதனையை இவரே முறியடித்துள்ளார்.
இவரின் இந்த சாதனை அங்கீகரிக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் அவரை அந்த அமைப்பானது இணைத்துள்ளது.
இதற்கு முன்பாக, அபய் குமார் ஒரு நிமிடத்தில் 91 நாடுகளின் பாஸ்போர்ட்டை சரியாக அடையாளம் கண்டு சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.